Aadhar-Card-1(C)
 
ரேசன்  கார்டு எப்படி மிக அவசியமோ, அதே போல ஆதார் கார்டும் அவசியம் என்கிற நிலை வந்துவிட்டது.  ஆனால் இன்னமும் பலரிடம் ஆதார்கார்டு இல்லை.  இருப்பவர்களும், “பெயர் தவறாக இருக்கிறது, முகவரி மாற்ற வேண்டும்” என்றெல்லாம் அல்லாடுகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் தீர்வு வருகிறது.
ஆதார் கார்டுக்காக பெயர் சேர்த்தல், திருத்தம்,  நீக்கம், முகவரி மாற்றம் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்புப் பணி உங்களது. உங்கள்  வீட்டிற்கு 18.01.2016 முதல் 05.02.2016 வரை கணக்கெடுப்பாளர்கள் வருவார்கள்.
இதன் அடிப்படையில்  உங்களுக்கு அரசால் ஸ்மார்ட் ரேசன் கார்டு  வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்!