மாவட்ட செய்திகள்
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே விவசாய கிணற்றில் விழுந்த கரடி உயிருடன் மீட்கப்பட்டது.
Karadi
சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டதில்  கிணறு உள்ளது.  இன்று விவசாய வேலைக்கு வந்த தொழிலாளர்கள் கிணற்றுக்குள் இருந்து ஒருவிதமான சத்தம் வருவதை பார்த்து கிணற்றை எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் கரடி இருந்தது தெரியவந்ததது.
இதுபற்றி மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து வலை கட்டி  கிணற்றுக்குள் இருந்த
கரடியை மீட்டனர். வலையை கிணற்றுக்கு மேலே தூக்கியபோது கரடி துள்ளிக்குதித்து காட்டுக்குள் ஓடியது.