azhagri
சென்னை:
சென்னை வந்த மு.க. அழகிரி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–
கேள்வி:– தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தங்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
பதில்:– தேர்தல் நெருக்கத்தில் எனது நிலைப்பாட்டையும், முடிவையும் தெரிவிப்பேன்.
கேள்வி:– கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உங்களின் ஆதரவாளர்கள் மீண்டும் சேர்க்கப்படுகிறார்களே?
பதில்:– என்னுடைய ஆதரவாளர்கள் எவரும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை. அப்படி நீக்க வேண்டும் என்றால் லட்சம் பேரை நீக்க வேண்டும்.
இவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்தார்.