v

 

12-10-2015 காலை முதலே ‘வாட்ஸ் அப்’ பில் நடிகை கே.ஆர்.விஜயா கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும், கேரலாவிலுள்ள ‘லத்திகா’ மருத்துவமனையில் அவரது உடலைப் பெற அவரது உறவினர்கள் காத்திருப்பதாகவும் செய்தி பரப்பப் பட்டது. சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து நிறைய விசாரனணகள். நாம் இங்குள்ள நண்பர்களிடம் பதற்றத்துடன் விசாரித்த போது அது தவரான தகவல் என்று தெரிய வந்தது.
கண்ணதாசன் தொடங்கி இப்போது சோ, கே.ஆர் விஜயா என்று அவர்களின் உணர்வுகளோடு (உயிரோடு) விளையாடும் அன்பர்கள் அதன் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க வேண்டும். தகவல் எதுவானாலும் அதை உறுதி படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அப்படி அல்லாமல் பொத்தாம் பொதுவாக தகவலை முந்தி அளிக்க வேண்டும் என்ற ஆர்வம் கோளாறாகிடக் கூடாது. இதே பிரச்சினை நாளை நமக்கும் திரும்பும் என்று உணர வேண்டும். உணர்வார்களா?

Ithayakkani S Vijayan https://www.facebook.com/vijayansundararajan?fref=ts