சென்னை-

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை நடிகர் ரஜினிகாந்தும் அவர் மனைவி லதாவும் இன்று சந்திக்க உள்ளனர்.
5 நாட்கள் அரசு முறைப்பயணமாக நேற்று சென்னை வந்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஆளுநர் வித்யாசாகர ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். மலேசியப் பிரதமருடன் அந்நாட்டின் சிறப்புத் தூதர் உத்மாப் எஸ் சாமிவேலு, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணி, அந்நாட்டின் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா உள்ளிட்டோரும் இருந்தனர்.   அவர்களுக்காக ஆளுநர் மாளிகையில் இரவு விருந்தும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் மலேசிய பிரதமரை சந்திக்க உள்ளார். இதன் பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவும் நஜீப் ரசாக் திட்டமிட்டுள்ளார்.  மலேசியாவில் உள்ள சுற்றுலா நகரமான மலாக்காவுக்குத் தூதராக ரஜினிகாந்த் நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.