ra
 
ன்  மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என சான்று அளிக்கும்படி சென்னை  காவல்துறை ஆணையர்  அலுவலகத்தில் நடிகர் ரஜினிகாந்த் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘2.0’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.  இந்த படத்தின் சில காட்சிகள் பொலிவியா நாட்டில் படமாக்கப்பட உள்ளது.
பொலிவியா நாட்டின் சட்டப்படி, அங்கு தொழில் ரீதியாக செல்ல வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையங்களில் எந்த குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கக்கூடாது என சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும்.
இதையடுத்து, படப்பிடிப்பிற்காக பொலிவியா செல்ல வேண்டிய நிலையில்,  தன் மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என சான்றிதழ் வழங்குமாறு சென்னை காவல்துறை ஆணையர்  அலுவலகத்தில் நடிகர் ரஜினி விண்ணப்பித்துள்ளார்.
விரைவில் அவருக்கு சான்றிதழ் அளிக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.