விஜயகாந்தை வரவேற்கிறேன்! : சி.பி.எம். கட்சி எம்.எல்.ஏ. பால பாரதி

அதோடு அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு அவர், “தொலைக்காட்சியில் பேசிய ஒருவரை குறிப்பிட்டே அந்த பதிவை எழுதினேன். தவிர அந்த பதிவு நேற்று எழுதப்பட்டது. கூட்டணி அறிவிக்கப்பட்டது இன்று. பிறகு எப்படி தே.மு.தி.கவை விமர்சிப்பதாகும்” என்றார்.
மேலும், “கட்சி தொடர்பான எனது கருத்துக்களை முகநூலில் நான் எழுதுவதில்லை. எங்கள் கட்சியில் ஃபோரம் இருக்கிறது. அதில்தான் பேசுவேன்.கருத்துக்களை வெளியிடும் உரிமை எங்கள் கட்சியில் நிறையவே இருக்கிறது. பிறகு ஏன் நான் முகநூலில் எழுத வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பினார்.