(கர்ணன் படத்தில் வரும் “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலின் மெட்டில்..)

IN08_RAIN9_11476g

 

வெள்ளத்தில் சென்னை வெள்ளம்
வடியாதென்பது வல்லவன் வகுத்தடா – வர்ணா
எம்மிடம் அருள் செய்யடா…

குடியேற இடம்தேடி
கூடாத செயல்செய்து
ஏரிகள் தூர்த்தோமடா – வர்ணா
இயற்கையிடம் தோற்றோமடா…

கால்வாய்க்கு வழியில்லை
நீர்போகப் பாதையில்லை
வீடுகள் மிதக்குதடா – நீயும்
தண்டித்தல் அறமல்லடா…

மழைவெள்ளம் வடியாமல்
மனம்நொந்த மக்களுக்கு
தாயுள்ளம் காட்டிடடா – வர்ணா
ரேஷனில் மழைபெய்யடா…

– சுரேஷ் காமாட்சி