11045484_1322959044396811_1644280205271279966_n

சென்னை மாநகரையே வெள்ளம் மூழ்கடித்து ஓய்ந்திருந்த நாட்களின் காலை, மாலை வேளைகளில் தேவையற்ற வீண் அலைச்சலை சாலைகளில் பார்க்கமுடிந்தது.

வேடிக்கை பார்த்த கூட்டத்தில் பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள்தான் அதிகம். முதன்முதலாக சாலைகளில் வெள்ளம் பார்க்கும் குதூகலம். போக்குவரத்து நெரிசலுக்கும் இந்தக் கூட்டம் காரணமாக அமைந்தது.

இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாக காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சாலைகளில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று கொண்டிருந்தன. பள்ளமும் மேடுமான பாலத்தில் குப்பைகள் குவிந்து கிடந்தன. நேற்று ஈக்காடுதாங்கல் பாலத்தில் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை விரட்ட இருபுறமும் நிறைய காவலர்கள் நின்றிருந்தனர்.

துயர்மிகு நேரத்திலும் வேடிக்கையா…?

சுந்தரபுத்தன்  https://www.facebook.com/natarajan.sundharabuddhan?fref=nf