vaico latest

 

.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் இனஅறு காலை 9.40 மணி அளவில் கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.

98 வயதான மாரியம்மாள், சமீபத்தின் கலிங்கப்பட்டியில் நடந்த மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில், உடல் நலிவுற்ற நிலையிலும் வீல் சேரில் வந்து கலந்துகொண்டார்.

ஈழப்போராளிகளுக்கு தனது கைகளால் உணவு சமைத்துப்போட்டவர். அதோடு காயமடைந்த ஈழப்போராளிகளுக்கு தானே முன்னின்று பணிவிடை செய்தவர்.

முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக நலிவடைந்தது. இதையடுத்து பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   நேற்று இரவு  அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  அங்கு ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால் இன்று காலை  9.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.     இவருக்கு  வைகோ மூத்தமகன்.  வை.ரவிச்சந்திரன் இளையவர். மேலும்  3 மகள்கள் உள்ளனர்.