டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளன்டன்
டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளன்டன்

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தலில் டொனால்டு டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தலா இரு மாகாணங்களில் தோல்வியடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் தேர்தல்கள் மாகாணங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 1ம் தேதி 12 மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப்பும், ஹிலாரியும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் 5ம் தேதி ஐந்து மாகாணங்களில் தேர்தல் நடந்தன.
இதில் கன்சாஸ், மெய்னே காகசஸ் ஆகிய மாகாணங்களில் டிரம்ப் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.
லூசியானா, கென்டகி மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சியிலும் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் கன்சாஸ், நெப் ரஸ்கா ஆகிய மாகாணங்களில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற்றார்.
லூசியானாவில் ஹிலாரி வெற்றி பெற்றார். தற்போதைய நிலவரப்படி டிரம்ப் மற்றும் ஹிலாரி தோல்வியை தழுவினாலும் இரு கட்சிகளிலும் தொடர்ந்து இவர்கள் இருவருமே முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.