மதுரை:

செய்திசேகரிக்க அலங்காநல்லூர் சென்ற வேந்தர் டிவியின் திருநெல்வேலி நிருபர் முத்துராமன் மற்றும் கேமராமேனை காவல்துறையினர் நேற்றிரவு கடுமையாக தாக்கினர்.

இவர்களது கேமராவை பிடுங்கி கீழே தள்ளிய போலீசார், பூட்ஸ் காலால் நிருபரையும், கேமராமேனையும்  மிதித்தனர்.

கடுமையாக காயம்பட்ட இருவரும், மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.