சினிமா தியேட்டர் பக்கம் ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து 5 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. தியேட்டர் ரிலீஸுக் காக விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் காத்திருக்கின்றனர்.
நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ படங் களுக்கு பிறகு டாக்டர், அயலான் படங் களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படங்களை முறையே நெல்சன் திலிப் குமார் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் இயக்குகின்றனர்.


இவற்றில் டாக்டர் படம் இந்த ஆண்டு ‘தீபாவளி’ க்கு வெளியாகும் என்று பேச்சு எழுந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு கோவா வில் படமாக்கப்பட்டு வந்தது ஊரடங் கால் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப் பட்டது. ஆனாலும் ஊரடங்கு நாட் களில் டாக்டர் படத்தின் இதுவரை படமான காட்சிகளை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் சீராக எடிட் செய்து வைத்து விட்டராம். இப்படத்தில் இடம் பெறும் ‘செல்லம்மா’ மற்றும் ‘நெஞ்சம்’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட் டுள்ளது. ​’டாக்டர்’ படப்பிடிப்பை முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே தேவை என்பதால் சீக்கிரமே படப்பிடிப் பை முடித்து தீபாவளியிட திடமிட்டிருக் கிறார்களாம். அதற்குள் மூடப்பட்டிருக் கும் திரை அரங்குகள் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில் டாக்டர் படக் குழு மட்டுமல்லாமல் மாஸ்டர், ஜெகமே தந்திரம் உள்ளிட்ட படக் குழுவினரும்
ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின் றனர்.