ல்பா, இமாசல் பிரதேஷ்

ந்தியாவின் முதல் வாக்காளர் சியாம் சரன் நேகி வரும் மே 19 ஆம் தேதி வாக்களிக்க உள்ளார்.

இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் கடந்த 1951 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடந்தது.   அப்போது முதன் முதலில் வாக்களித்தவர் இமாசல பிரதேசத்தை சேர்ந்த சியாம் சரன் நேகி என்பவர் ஆவார்.

இவர் அன்று முதல் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து வாக்களித்து வருகிறார்.

தற்போது 17 ஆம்  மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சியாம் சரண் நேகி இமாசலப் பிரதேசத்தில் உள்ள கல்பா பகுதியில் வாக்களிக்க உள்ளார்.

தற்போது 102 வயதாகும் இவர் ஒரு முறை கூட வாக்களிக்க தவறியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்