பரிமலை

ன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் மூன்று முறை தெரிந்தது.

சபரிமலையில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.  ஒவ்வொரு வருடமும் மகர ஜோதியை முன்னிட்டு பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பெட்டி வந்து சேர்ந்துள்ளது.,   மகர விளக்குப் பூஜைகளை முன்னிட்டு தற்போது 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவாபரணப் பெட்டியில் உள்ள ஆபரணங்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அதன் பிறகு மகரஜோதி தரிசனம் தென்படும்.   சபரிமலை ஐயப்பனே மகரஜோதியாகப் பக்தர்களுக்குத் தரிசனம் அளிப்பதாகக் கருதப்படுகிறது.

இன்று சுமார் 6.40 மணிக்கு மேல் பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி தெரிந்தது.  இதையொட்டி பக்தர்கள் சரண கோஷத்துடன் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்துள்ளனர்..