இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி
இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு, ஆடி வெள்ளி பெண்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

அருகிலிருக்கும் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று ஆர்ச்சனை செய்து , கோவிலை மூன்று முறை வலம் வந்து வழிபடலாம்.

கோவில்களில் அர்ச்சனை செய்யும்போது நமது வேண்டுதலுக்கு தகுந்தாற் போல கீழேயுள்ள 21 இலைகளில் எவையேனும் ஒன்றைக் கொடுத்து அர்ச்சனை செய்யலாம்.

1. நியாயம் கிடைக்க – மாவிலை

2. வாழ்வில் இன்பம் கிடைக்க – வில்வம் இலை

3. இல்வாழ்க்கை இனிக்க – கரிசலாங்கண்ணி

4. கல்வியில் வெற்றி பெற – இலந்தை

5. பொறாமை நீங்கி பெருந்தன்மை பெருக – ஊமத்தை

6. வசீகரம் – நாயுருவி

7. தைரியம் , வீரம் விவேகம் பெற – கண்டங்கத்தரி

8. வாழ்கையில் வெற்றி பெற – அரளி

9. உயர்பதவி, நன்மதிப்பு கிடைக்க – அரசு

10. திருமணத்தடை விலகி நல்ல வரன் அமைய – தவனம்

11. இல்லற சுகம் பெற – மரிக்கொழுந்து

12. செல்வச் செழிப்பு பெற – நெல்லி

13. குழந்தை வரம் பெற – மருதம்

14. கடன் தொல்லையிலிருந்து விடுதலையடைய – அகத்திக்கீரை

15. சொந்த வீடு, பூமி பாக்கியம் – ஜாதி மல்லி

16. ஞானம் , அறிவு , தன்னம்பிக்கை பெறுவதற்கு – துளசி

17. பேரும் புகழும் கிடைக்க – மாதுளை

18. கருவிலுள்ள சிசுவிற்குப் பாதுகாப்பு மற்றும் வம்ச விருத்தியடைய – எருக்கு

19. சகல வித பாக்கியங்களும் பெற – அருகம்புல்

20. அனைத்துச் சக்தியையும் தாங்கும் இதயம் பெற – தேவதாரு

21. இவ்வுலகில் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகும் நன்மைகள் கிடைக்க – வன்னி