பிரான்ஸ்:
லகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்  கடுமையான பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நோயின் பிடியில் இருந்து  மரணத்தை தழுவினார்.
நாய் கடித்ததால் டிவிகாரமாக மாறிப்போன இசபெல்லி டினோரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.
1face
ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன. முதலில் வெற்றி கரமாக  முடிந்த அறுவை சிகிச்சை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து டினோரி மருத்துவ கண்காணிப்பில்  வைக்கப்பட்டார். ஆனாலும்  பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்  பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். 10 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாலும் பக்க விளைவுகளால் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.  இந்த தகவலை  தற்போதுதான்  ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முகமாற்று ஆபரேசனின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு  ஸடீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.