டெல்லி:

நாடு முழுவதும் ஊரடங்கு அமே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், உள்நாடு, வெளிநாடுகளுக் கான விமான சேவைகள் அனைத்தும் வரும் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யபட்டுள்ளதாக விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டு 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், இன்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி,  நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படு வதாக அறிவித்தார்.

இந்த நிலையில்,   மே 3 ஆம் தேதி வரை, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால்,  பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனையின்போது கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடரக் கூடாது என மாநில முதல்வர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.