ashna zaveri

 

நேற்று காலை முதலே வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது திருப்பதி கோயில் பின்னணியில் நடிகர் சந்தானத்தின் அந்த படம். வேட்டி கட்டியபடி கல்யாண மாப்பிள்ளை போல் அவர் நடக்க.. அவரது ஆஸ்தான நாயகி ‘ஆஷ்னா ஜாவேரி”யும் உடன் வர…

“ரெண்டுபேரும் கண்ணாலம் கட்டிக்கிட்டாங்க…” என்ற குறிப்புடன் இந்த படம்தான் வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது.

இதையடுத்து சந்தானம் தரப்பு விளக்கம் அளித்தது:

‘இனிமே இப்படித்தான்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸூக்காக முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரிக்கிறார். ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா முதன் முதலாக பெரிய திரை இயக்குநராகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 15ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.

 

san

ஒரு படத்தை ஆரம்பிக்கும்போதும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வது சந்தானத்தின் வழக்கம். புதிய படத்துக்காக அப்படி படக்குழுவினரோடு சென்ற போது எடுக்கப்பட்ட படம் அது. அதைத்தான் தவறான செய்தியோடு பரப்பி விட்டார்கள் என்கிறது சந்தானத்தின் தரப்பு.

“அதெல்லாம் சும்மா… இருவருக்கும் இடையே நெருக்கம் என்பது பட உலகுக்கே தெரியும். தொடர்ந்த இரண்டு படங்களில் தனக்கு கதாநாயகியாக ஆஷ்னா ஜாவேரியை நடிக்க வைத்த சந்தானம், தனது மூன்றாவது படத்திலும் நடிக்க வைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்..” என்று இப்போதும் கல்லைத்தூக்கிப்போடுகிறது இன்னொரு தரப்பு.

பட டயலாக் மாதிரியே, “ஏண்டா இப்படி கொல்றீங்க…” என்று புலம்பி வருகிறார் சந்தானம்.