raja
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாராகி விட்டது. வருகிற 31–ந் தேதி டெல்லியில் நடைபெறும் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு ஏப்ரல் 4–ந் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
ஐ.ஜே.கே., புதிய நீதிக் கட்சி மற்றும் சில அமைப்புகளிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களது விருப்ப பட்டியலில் இல்லாத தொகுதிகளுக்குத்தான் முதல் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது. ஏப்ரல் 4 அல்லது 5–ந் தேதி முழுமையான பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பல்வேறு வழிகளில் பணப்பட்டுவாடா நடந்தது. அதுபோல இம்முறை நடக்காதவாறு தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்’’என்று கூறினார்.