புதுடெல்லி:

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) உத்தரவையடுத்து, ஏர்டெல், டிஸ் டிவி மற்றும் ஹாத்வே கேபிள் ஆகிய டிடிஹெச் ஆபரேட்டர்கள், ஒவ்வொரு சானலுக்கும் தனிக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

இதற்கான அறிவிப்பை தங்களது இணையத்தில் அந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன தாங்கள் விரும்பும் சானலை தேர்வு செய்துகொள்ள ஜனவரி 31-ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ள டிராய், அதுவரை வாடிக்கையாளர்கள் பழைய பேக்கேஜில் சானல்களை பார்ப்பதற்கு இடையூ று செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.