“வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் சமீரா ரெட்டி . தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2015-ல் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் தான் கர்ப்பமாக இருப்பதாக இந்த வருட துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார் சமீரா.

சமீபத்தில் கூட நிறைமாத கர்ப்பிணியாக தண்ணீருக்குள் ஃபோட்டோ ஷூட் நடத்தியிருந்தார் . கடந்த மாதம் ஜூன் 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு “நைரா” என பெயர் வைத்துள்ளனர். அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது மகள் நைரா பிறந்து ஒரு மாதம் ஆகியுள்ளதை அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் .