11822464_1626899257565794_4460440438624979305_n

பிரபல பேஸ்புக் பதிவர் உமையாள் (உமாமகேஸ்வரி)    தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும், “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்”  தொடர் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. அதே நேரம், அதில் வரும் கதாபாத்திரங்கள் தங்களை குறிப்பதாக, முகம் தெரியாத சிலர் உமையாளை டார்ச்சர் செய்ய…   அவர் காவல்துறையில்  புகார் கொடுத்ததிருக்கிறார்.  நேற்று இந்த செய்தியை ungalpathrikai.com   இதழில் வெளியிட்டிருந்தோம்.

முகநூல் மூலம், பெண்களை மயக்கி தன் வலையில் விழவைக்கும் “நாயகன்” பற்றிய தொடர் இது. சமூகவலைதளங்களில் இயங்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும் உதவும் தொடர்.

இதுவரை 22 அத்தியாயங்களை தனது பக்கத்தில் எழுதியிருக்கிறார் உமையாள்.

இனி, அவரது “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” தொடர், ungalpathirikai.com  இதழில் வெளியாகும்… ஒவ்வொரு  திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வெளியாகும்!