சுசீந்திரன் – மெஹ்ரீன்

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், துளசி, ஷாதிகா நடிப்பில் உருவான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி  அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை ஏற்று, படத்தில் இருந்து கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளார் சுசீந்திரன்.

இது குறித்து தெரிவித்த இயக்குநர் சுசீந்திரன் “நெ]சில் துணிவிருந்தால்’ படத்தில் இருபது நிமிட காட்சிகளை நீக்கி இருக்கிறோம். நாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் புதிய வெர்சன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கினோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்தார்.