நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்:
newsbond
நாளை மறுநாள் மாலுமி கட்சி நடக்கவிருக்கும் மாலுமி மாநாட்டில், இணைவதற்காக வாசமானவருடன் பேச்சு நடந்துகொண்டிருக்கிறதாம். மாலுமி மனைவியார், தங்களது  கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து ஒரு இடம் கூட தரமுடியாது என்று சொல்லிவிட்டாராம்.
மற்ற கூட்டணி கட்சியினரும் இடத்தைக் கொடுக்க தயங்க.. நடைபயணக்காரர், தான் அதிகமான சீட்டுக்களை விட்டுக்கொடுப்பதாகவும், மற்றவர்களும் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள் என்றும் சொல்லிவருகிறாராம். பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு புறம் மலர் கட்சியுடனான பேச்சையும் தொடர்கிறார் வாசமானவர்.
அதே நேரம், இலை கட்சி தன்னை அழைக்கும் என்ற நம்பிக்கையும் இன்னும்  அவருக்கு இருக்கிறதாம்.
ஹூம்..!