கொழும்பு:

லங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேறறு ஊவா மாகாணத்தின் வெள்ளவாய பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இலங்கை அரசு இன்றோ நாளையோ கவிழ்க்கப்பட்டுவிடும் என்ற கருத்தை சிலர் மக்களிடையே பரப்பி வருகிறார்கள். இவர்களில் சில ஊடகத்துறையினரும் இருக்கிறார்கள்.. இது மிக தவறான, கண்டிக்க வேண்டிய செயலாகும்.

அரசியல் லாபத்துக்காக சுயலத்துடன் சில ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியாது” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “’அரசாங்கத்தில் குறைபாடுகள் இருக்கலாம் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் அமைந்த பிறகுதான் நாட்டில் நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கிறது. .

ஆனால் நாம் கொடுத்த அதே சுதந்திரத்தை வைத்து அதே ஊடகங்கள்  இந்த ஊடகங்கள், மக்களிடம் குழப்பமான செய்திகளை பரப்புகின்றன. இது போன்ற செய்திகளை பார்ப்பவர்கள் என்னிடமே நாளையே அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்று தாங்கள் கருதுவதாக தெரிவிக்கின்றனர்.

‘ஊடகங்களில் வெளியாகும் முட்டாள்த்தனமான, கோமாளித்தனமான அரசியல் செய்திகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்து விட முடியாது.

நாட்டை  முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்று பொருளாதாரத்தை உயர்த்தி மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பது எங்களது கடமையாகும்.  அதற்காக  பதவிக்காலம் முடியும் வரை இந்த அரசாங்கம் உழைக்கும்” என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.