jayalalithaa
தேசிய தலைவர்கள் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளனர்.
தேசிய தலைவர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முதல்வர் நன்றாக குணமடைந்து விட்டார் என்று கூறி வந்த நிலையில் திடீரென அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தமிழக பொறுப்பு கவர்னர் வித்யா சாகரும் சென்னை வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த செய்தி தேசிய அளவில் பரவி தேசியத் தலைவர்கள் அனைவரும் முதல்வர் குணமடைய வேண்டும் என்று தங்களது சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வெங்கய்யா நாயுடு, மம்தா பானர்ஜி உட்பட இந்திய தலைவர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதா விரைவில் குணமடைய வாழ்த்தும் தெரிவித்ததுடன் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.