இன்ஜினியர், ரவுடி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இன்ஜினியரான அருண் விஜய்யும், தன்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். யோகி பாபுவுடன் சேர்ந்து சிறுசிறு திருட்டு வேலைகளை பார்த்து வருகிறார் ரவுடி அருண்விஜய்.

 

யோகி பாபுவை ஒரு கும்பல் பணத்திற்காக பிடித்து செல்கிறது. யோகி பாபுவை மீட்பதற்காக பணம் சேர்க்கும் முயற்சியில் இறங்குகிறார் கவின் என்னும் அருண் விஜய்

இந்த நிலையில், அருண் விஜய்யால் ஒருவர் கொல்லப்படுகிறார். இதையடுத்து இரண்டு அருண் விஜய்யையும் போலீசார் கைது செய்கிறார்கள். கடைசியில் எந்த அருண் விஜய் இந்த கொலையை செய்தார்? ஒரே மாதிரியாக இருக்கும் இருவருக்கும் என்ன தொடர்பு? இந்த வழக்கு என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

த்ரில்லர் கதைக்கு பெயர் போனவர் மகிழ் திருமேனி என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், இந்த படத்தையும் ரசிக்கும்படியாக கிரைம் த்ரில்லாக உருவாக்கி இருக்கிறார்.

அருண்ராஜ் இசையில் பாடல்கள் எஸ்.கோபிநாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `தடம்´ ஒரு தரமான சம்பவம்