தர்மபுரி:

மிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்பை தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 72 இடங்களில் புதிதாக எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மழலையர்களுக்கான எல்கேஜி வகுப்பு தொடங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நேற்று எல்கேஜி வகுப்புகளை சென்னை எழும்பூர் மாதிரி பெண்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை அமைச்சர் அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த விழாவில்,  மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து எல்.கே.ஜி. வகுப்புக்கு புதிதாக குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து தர்மபுரி  மாவட்டம் முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி ,  தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமி பேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப் பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் எல்கேஜிவகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும்,  நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் புதிதாக எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும்,  பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் எல்கேஜி  வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பை தொடங்கி வைத்த அமைச்சர்

அதுபோல  பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும்,

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில்  எல்கேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.