daanam1

நாம் தானம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே…
1. அன்ன தானம் – தரித்திரமும் கடனும் நீங்கும்.
2. வஸ்திர தானம் -ஆயுளை விருத்தி செய்யும்.
3. பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும்.
4. கோதுமை தானம் – ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.
5. தீப தானம் – கண்பார்வை தீர்க்கமாகும்.
6. நெய், எண்ணை தானம் – நோய் தீர்க்கும்.
7. தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங்கும்.
8. வெள்ளி தானம் – மனக்கவலை நீங்கும்.
9. தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாகும்.
10. நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.
11. அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
12. பால் தானம் – துக்கம் நீங்கும்.
13. தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.
14. தேங்காய் தானம் – நினைத்த காரியம் நிறைவேறும்.
15. பழங்கள் தானம் – புத்தியும் சித்தியும் கிட்டும்.
ராஜீவ் வரதன் – முகநூல் பதிவு