sdpi
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்த அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இந்த பேச்சு வார்த்தையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெகலான் பாகவி, பொதுச் செயலாளர் அப்துல் அமீது, துணை தலைவர்கள் முபாரக், ரபீக்அகமது, மாநில செயலாளர் அமீது அம்சா ஆகியோர் பங்கேற்றனர். தி.மு.க. தரப்பில் மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.  எஸ்.டி.பி.ஐ. சார்பில் சில தொகுதிகளை கேட்டிருக்கிறார்கள். திமுகவும் சில தொகுதிகளை சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் பேச்சு வார்த்தைக்கு நடைபெறவிருக்கிறது. அப்போது தொகுதிப்பங்கீடு இறுதி பெறும் என்று கூறப்படுகிறது.