IMG-20160404-WA0002
காங். மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து காங். கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் மூலம் தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்: தி.மு.க. – 180 காங். – 41 ஐ.யூ.எம்.எல். – 5 மனிதநேய மக்கள் கட்சி -5 பெருந்தலைவர் மக்கள் கட்சி -1 விவசாய தொழிலாளர் கட்சி-1 சமூக சமத்துவ படை கட்சி – 1