ஜிகியோன், தென் கொரியா
தென் கொரியாவில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மையம் தீப்பிடித்ததில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
தென் கொரிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ஜிகியோன். இங்கு 8 மாடிகளைக் கொண்ட முக்கோண வடிவில் ஆன வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தில் வீடுகள், நீச்சல் குளம், மற்றும் ஓட்டல்கள் உள்ளன. மூன்றாவது மாடியில் ஒரு விளையாட்டு மையம் அமைந்துள்ளது.
இந்த விளையாட்டு மையத்தில் திடீரென தீப்பிடித்து தீ வேகமாக பரவி உள்ளது. அங்கிருந்தவர்கள் வெளியேற அதிகம் வழி இல்லாததால் பலரும் தீயில் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயணைப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றன. இது வரை சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பலர் இந்த விபத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தி விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.