டிகை சாய் பல்லவி முதல் படமான பிரேமம் படத்தை முடித்தவுடன் டாக்டர் படிப்புக்காக வெளி நாடு சென்றார். படித்து முடித்து வந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் திவ்யா என்ற படத்தில் நடித்தாலும் தனுஷுடன் நடித்த மாரி 2′ படமும் அதில் அவர் தனுஷுடன் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடலும் ரசிகர் களிடம் கொண்டு சென்று சேர்த்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்தார்.


நடிகை சாய் பல்லவி ஒரு எம்.பி.பி.எஸ் மாணவி. இவர் திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் ஒரு தேர்வு எழுத வந்தார். கொரோனா லாக்டவுன் என்பதால் முகமூடி அணிந்து வந்த அவரை முதலில் யாரும் அடையாளம் காணவில்லை. பின்னர் அடையாளம் கண்டுகொண்டதும் சாய் பல்லவி சூழ்ந்துக்கொண்டனர். செல்ஃபி எடுக்க கேட்டனர். அவர்களுக்கு சிரித்தபடி போஸ் அளித்தார்.
நடிகை சாய் பல்லவி தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ மற்றும் ராணாவுடன் ‘விராட்டா பர்வம்’ படங்களில் நடித்து வருகிறார்.


தமிழில் கைவசம் படம் எதுமில்லை என்றாலும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார்,
Sai Pallavi In Exam Hall Sudents Ask Selfi