தனுஷ் இயக்குனராக பா.பாண்டி என்ற படம் மூலமாகத்தான் அறிமுகம் ஆனார்.

பா.பாண்டி மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் தனுஷ் 2017ல் தனது இரண்டாவது படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார்.

அது வரலாற்று படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த படம் துவங்கி சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு தனுஷ் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தனுஷ் தனது இரண்டாவது படத்தினை மீண்டும் துவங்கும் முனைப்பில் இருக்கிறார் என தகவல் சமீபத்தில் வெளியானது. தனுஷின் கனவு படமான இதற்கு ‘நான் ருத்ரன்’ என பெயர் வைத்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

அதில் 600 வருடங்களுக்கு முன்பு நடப்பது போலவும் ஒரு பகுதி இருக்கிறிது என்றும் அதனை இயக்க தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் உதவியை நாடி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.