சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்தவர் சாய் சுதா.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடுவுடன் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார் .
இந்நிலையில் சாய் சுதா ஷ்யாம் கே. நாயுடு மீது எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே. நாயுடு என்னை கட்டாயப்படுத்தி தன்னை காதலிக்க வைத்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார். என்னை நம்ப வைத்து ஏமாற்றிய ஷ்யாம் கே. நாயுடு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார் .
சாய் சுதா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷ்யாம் கே. நாயுடுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிசினஸ்மேன் படத்திற்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் ஷ்யாம் கே. நாயுடு. அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல
2017ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சிக்கிய போதைப் பொருள் ஆசாமியுடன் ஷ்யாம் கே. நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது .