11aa

வேலூர்:

ஏராளமான மக்கள் வேடிக்க பார்த்தபடி நிற்க, நடு சாலையில் நடந்த படுகொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ரவி என்பவரின் தம்பி ரமேஷை  2 ஆண்டுகளுக்கு முன்பு மகா என்ற ரவுடி வெட்டி கொன்றார்.  இதையடுத்த கைது செய்யப்பட்ட  மகா சிறையில் அடைக்கப்பட்டார்.  பிறகு ஜாமீனில் வெளியே வந்த இவர், ரவியையும் கொல்ல திட்டமிட்டார்.

111

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ரவி கலந்துகொண்டதை கேள்விப்பட்ட மகா, தனது கூட்டாளிகள் மூவருடன் வந்து ரவியை கத்தியால் குத்தினார்.  காயத்துடன் ரவி தப்பி ஓடிவிட்டார்.

இந்த தகவல் அறிந்த ரவியின் ஆதரவாளர்கள், மகாவை சூழ்ந்துகொண்டு நடு ரோட்டில் கல்லாலேயே அடித்து துடிக்கத் துடிக்க கொன்றார்கள்.

நடு சாலையில் பலரும் பார்க்கும்படி நடந்த இந்த கொலையை யாரோ புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் பதி்துவிட்டார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த கொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.