oooooooooooooooooo

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி இன்று விடுவிக்கப்படுவது நாடு முழுதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக இணையதளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர் பத்வு இது:

“முழு உலகமே அதிர்ச்சிக்குள்ளான டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் கொடூர கற்பழிப்பு கொலை வழக்கில் இருந்து குற்றவாளி ஒருவன் “சிறுவன்” என்ற போர்வையில் இந்திய நீதிமன்றத்தால் விடுதலை செய்யபட்டான். கொடூரமாக கற்பழிப்பு +கொலை செய்யும் அளவிற்கு உடல் வளர்ச்சியும் ,மன வளர்ச்சியும் உடைய இந்த மிருகமா “சிறுவன்” ..? முழு உலகமே இந்த தீர்ப்பை கண்டு காறித்துப்புகின்றது. முதலில் ஊழல் செய்த முதலமைச்சர் ஒருவரை விடுதலை செய்தார்கள் பின்னர் குடித்துவிட்டு போதையில் கார் ஏற்றி கொலை செய்த நடிகனை விடுதலை செய்தார்கள். இப்போ கற்பழிப்பு குற்றவாளி…?? நாளை….??”