மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட் உரை தொடர்ச்சி….

புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், பிரதமரின் தலைமையின் கீழ், இந்திய மக்களை அனைத்து பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் முன்வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் பொருளாதாரக் கொள்கையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறிய நிதி அமைச்சர் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவித்து வருகிறார்.

பிரதான் மந்திரி குசும் திட்டத்த்தால் விவசாயிகள் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் சார்ந்திருப்பது தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும்,  விவசாயிகள் நலம் பெறும் வகையில், பிரதம மந்திரி கிஷன் உர்ஜா சுரக்ஷா அவம் உத்தான் மகாபியான் திட்டத்தின் கீழ், ( Pradhan Mantri Kisan Urja Suraksha avem Utthan Mahabhiyan (PM KUSUM) ) மேலும் 10லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் வழங்கப்படும் என அறிவித்தார். முழுமையான சூரிய விசையியக்கக் குழாய்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்படும் என்றும் கூறினார்.

ஃபசல் பீமாவின் கீழ் மொத்தம் 6.11 கோடி விவசாயிகள் காப்பீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். மாநில அரசு ஒத்துழைப்புடன் விவசாய மேலாண்மை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும் என்றார்.