டில்லி:

பெண் பக்தை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வடமாநில சாமியார் குர்மித் ராம் ரகீம் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா மற்றும் டில்லியில் கலவரம் வெடித்துள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் பேர் பலியானார்கள். 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஞ்சாபில் ரயில் நிலையத்திற்கும், பெட்ரோல் பங்கிற்கும் கலவரக்காரர்கள் தீ வைத்தனர். .

இதனை தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நிலவுகிறது. பஞ்ச்குலா, பெரோஸ்பூர், சோனாபட், சிர்சா, பர்னாலா, சங்ரூர், சண்டிகார் தேசிய நெடுஞ்சாலை , டில்லி உள்ளிட்ட 50க்கும் மேற்டட இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. பல வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரம் பாதித்த பகுதிகளுக்கு துணை ராணுவ படையினர் விரைந்துள்ளனர். கலவர வீடியோக்கள் சில..

[embedyt] https://www.youtube.com/watch?v=defVn4Lv8DI[/embedyt]