கவுகாத்தி:

குடியுரிமை சட்டதிருத்த விவகாரத்தில் அசாம் அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக-வை விட்டு வெளியே வாருங்கள். நீங்கள் மீண்டும் முதல்வராக நாங்கள் ஆதரவு தருகிறோம் என அசாம் முதல்வர் சர்பனாந்தா சோனாவலுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான தேபப்ரதா சைக்கியா.

அசாம் சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சித் தலைவருமான தேபப்ரதா சைக்கியா உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாஜக அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் “தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், பாஜக-விலிருந்து 40 எம்எல்ஏக்களுடன் முதல்வர் சர்பனாந்தா சோனாவல் விலக வேண்டும். அவர் மீண்டும் முதல்வராக 25 எம்எல்ஏக்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்று அழைப்பு விடுத்தார்.

பாஜக கூட்டணியிலிருந்த அசாம கன பரிஷத்தும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.