download
பா.ம.க மாநாட்டை வண்டலூரில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பா.ம.க.வின் மாநில மாநாடு வருகிற 14–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வண்டலூரில் நடைபெறும் என்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பே  அக் கட்சி அறிவித்தது.  இந்த மாநாட்டை அங்கு நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.  மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக  உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வருகிற வெள்ளிக்கிழமை (இன்று) வரை மாநாட்டு பணிகளை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், “வண்டலூரில் தற்போது பாமக முடிவு செய்திருக்கும் இடத்தில் அக் கட்சி மாநாட்டை நடத்தலாம்” என்று உத்தரவிட்டுள்ளது. .