சென்னை

பெண்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட தேசிய பெண்கள் கட்சியின் தலைவியாக பிக் பாஸ்  புகழ் நித்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற நடிகர் பாலாஜி.  இவரை தாடி பாலாஜி என அழைப்பது வழக்கம்.    இவருடைய மனைவி நித்யா.   இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.   அதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்வின் சீசன் 2 வில் இருவரும் கலந்துக் கொண்டனர்.    இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு நித்யாவும் பிரபலம் அடைந்தார்.     நித்யா தற்போது அரசியலில் நுழைந்துள்ளார்.

பிரபல மருத்துவரான ஸ்வேதா ஷெட்டி புதியதாக ஒரு கட்சியை தொடங்கி உள்ளார்.  இந்த கட்சிக்கு தேசிய பெண்கள் கட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.   இந்த கட்சி முழுக்க முழுக்க பெண்கள் நலனுக்காக பாடுபட உள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது.

இந்தக் கட்சி தற்போது பாராளுமன்றம் மட்டும் சட்டப்பேரவை தேர்தல்களில் பெண்களுக்கு  50 சதிவிகித ஒதுக்கீடு தேவை என கோரிக்கை விடுத்துள்ளது.   இந்தக் கட்சியில் இணைந்த பிக் பாஸ் புகழ் நித்யா தலைவியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.