modi5678
புதுடெல்லி,
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த அவர் இன்று பிரதமரை சந்திக்கிறார் மாலத்தீவு அதிபர் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு புதுடெல்லி :
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீன் அப்துல் கயூம் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு, மத்திய மந்திரி மகேஷ் சர்மா தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
அதிபர் அப்துல்லா யமீன் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் அதிபர் அப்துல்லா யமீன் சந்தித்து உரையாடுகிறார்.