nazim zaidi
சென்னை: வரும் மே 31-ஆம் தேதிக்குள், தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த சென்னை வந்த நஜீம் ஜைதியிடம் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக தேர்தல் நடத்திட தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. .
மேலும், அணைத்து வாக்கு சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பண விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்தல் ஆணையத்தை தமிழக அரசியல் கட்சிகள் வலியுறித்தி கூறியுள்ளன. .
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய நஜீம் ஜைதி, அரசு அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பிறகு அவர், “வரும் மே 31ம் தேதிக்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து கட்சிகளுக்குள் நடக்கும் கூட்டணி பேச்சுக்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.