சௌந்தர்யா ரஜினிகாந்த்க்கும் விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, ஹனிமூனுக்கும் சென்று வந்தனர்.

ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், நேற்று சௌந்தர்யாவும், வேத் கிருஷ்ணாவும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேத் கையில் ட்ரில்லர் மெஷின் போன்ற ஒன்றை பார்த்து சௌந்தர்யா மகனிடம் சரமாரியாக கேள்வி கேட்க தேவ்வும் சளைக்காமல் பதில் சொல்லி இருக்கார்.

இந்த வீடியோவை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இப்போதே எனது மகன் கார் மெக்கானிக்காக வந்துட்டான் என்று பெருமிதமாக கூறியுள்ளார்.எங்களது சொந்த லில் மெக்கானிக். வேத் காரை வடிவமைக்கிறான் என்று குறிப்பிட்டுள்ளார்.