சென்னை:

புதுகை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு அனுமதித்திருக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளிக்காது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஹெட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் குழுவினர் இன்று காலை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்தனர். பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் கருத்தை வலியுறுத்தினர்.

அவர்களது கருத்தை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும் தெரிவித்ததாகவும், டில்லியில் முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்து முதல்வர் பேசியதாகவும், ஆகவே விவசாயிகள் போராட்டத்தை போராட் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.