மும்பை: இங்கிலாந்து அணிக்கெதிராக பிப்ரவரி மாதம் நடைபெறும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அணியில் தமிழ்நாட்டின் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால், அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடரிலும் விளையாடுகிறது.

இந்நிலையில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை மட்டும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த அணி விபரம்: விராத் கோலி (கேப்டன்), ரஹானே (துணைக் கேப்டன்), ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால், ஷப்மன் கில், சத்தீஷ்வர் புஜாரா, சஹா, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் (உடல் தகுதி அடிப்படையில்), ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ஷர்துல் தாகுர், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல்.

மாற்று வீரர்களாக பிரியங்கா பஞ்சல், கே.எஸ்.பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷான்பாஸ் நதீம், ராகுல் சாஹர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர்,கே. கவுதம், சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.