சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் நேற்று உச்சபட்சமாக 1149 பேருக்கு தொற்று பரவியது.  சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்,  1,149  பார் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 804 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.

அவற்றில் 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ராயபுரம் மண்டலம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அங்கு, பாதிப்பு எண்ணிக்கை 2,737 ஆக அதிகரித்துள்ளது.  கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,798 பேரும், திரு.வி.க. நகரில் 1,556 பேரும், தேனாம் பேட்டையில் 1,662 பேரும், தொண்டியார்பேட்டையில் 1,661 பேரும் மற்றும் அண்ணா நகரில் 1237 பேரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 14802 ஆக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.