டெல்லி: இந்தியாவில் கொரோனாபாதிப்பு 37லட்சத்தை நெருக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் 68,766 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது

மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள தகவலின்படி,   (காலை 6 மணி நிலவரம்)  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,766  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,87,939 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 817 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,434 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில் 64,645 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரண மாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,37,377 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் 7,84,450 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.